Thursday 10 July 2014

                                                            மாங்கனி திருவிழா


காரைக்காலில் வரும்12ம் தேதி மாங்கனி திருவிழா துவங்குகிறது. 
காரைக்கா லில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் அம்மையாரின் கணவனிடம்  சிவபெருமான் மாங்கனி கொடுத்து அனுப்பி, அதை அடியார் வேடத்தில் சிவபெருமான் வந்து சாப்பிடுவதும், இதனால் காரைக்கால் அம்மையாரை  பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வதும், அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக கைகலால் நடந்து செல்வதையும் சி த்தரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இன்று ஜூலை 10 மாப்பிள்ளை அழைப்பும், நாளை 11ம் தேதி காரைக்கால்  அம்மையார், பரமதத்தர் செட்டியார் திருக்கல்யாணமும், இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடும், நாளை மறுநாள் 12ம் தேதி சிவபெருமான்  அடியார் கோலத்தில் வீதி உலா வருவதும், அப்போது பக்தர்கள் மாங்கனி விசும் வைபவம் நடக்கிறது. அன்று மாலை அம்மையார் சிவபெரு மானுக்கு மாங்கனியுடன் அமுதுபடையல் நிகழ்ச்சி நடக்கிறது.
                                ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment